வட மாகாணத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 80 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரின் வசமிருந்த 56,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். ஏனைய பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 21,698.79 ஏக்கர் காணி விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிளிநொச்சி மாவட்டத்தில் 24,390.35 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7066.69 ஏக்கர் காணியும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.