Header image alt text

யாழ். சாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. Read more

அவுஸ்திரேலியாவில் சட்டபூர்வமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏதிலிகள் நிர்கதியாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

அவஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆரம்ப காலங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்து பின்னர், ஏதிலி அந்தஸ்த்து வழங்கப்பட்டு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு தொழில்புரிய அனுமதிக்கப்படுவதில்லை. Read more

எதிர்வரும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா, இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 1ம் திகதிமுதல் 7ம் திகதி வரையான காலப்பகுதியில் பல்வேறு பேரணிகள் இடம்பெறவுள்ளன. Read more

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தரும் பயணிகளின் பயணப்பொதிகள் திருட்டுப்போவது தொடர்பில், கடந்த மூன்று மாத காலப்பகுதியில், 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாட்டிலிருந்து, நேற்று முன்தினம் (25), கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்த பயணி ஒருவரது, பயணப்பை இவ்வாறு திருடப்பட்டுள்ளது. Read more

தேர்தல் முறைமை குறித்த ஆர்வலர்களின் மாநாடு ஒன்று கொழும்பில் கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், தேர்தல் சார்ந்த நிபுணர்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பிலான ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

சைட்டம் வைத்தியக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி 6ஆம் திகதி, வைத்தியக் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமீர சேனாரத்ன உயிர்தப்பியிருந்தார். Read more

யாழ். இரணைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, பொதுமக்கள் அந்த தீவில் ஐந்தாம் நாளாகவும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது பூர்வீகக் காணியை விடுவிக்க கோரி 362 நாட்களாக அவர்கள் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரணைத்தீவுக்கு சென்று அங்கிருந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி வெண்கலப் பதக்கம் வென்றார்.

போட்டியில் அவர் 33.73 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரியின் ருமேஷ் தரங்க போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். Read more

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பாம்பீச் பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

கடல்மார்க்கமாக சிறிய படகு மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் 11வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியளார் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இதில் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், Read more