யாழ். இரணைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, பொதுமக்கள் அந்த தீவில் ஐந்தாம் நாளாகவும் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது பூர்வீகக் காணியை விடுவிக்க கோரி 362 நாட்களாக அவர்கள் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரணைத்தீவுக்கு சென்று அங்கிருந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.