கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத்தரும் பயணிகளின் பயணப்பொதிகள் திருட்டுப்போவது தொடர்பில், கடந்த மூன்று மாத காலப்பகுதியில், 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாட்டிலிருந்து, நேற்று முன்தினம் (25), கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தடைந்த பயணி ஒருவரது, பயணப்பை இவ்வாறு திருடப்பட்டுள்ளது.குறித்த பொதியில், பெறுமதியான பொருட்கள், மற்றும் பணம் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கமராவின் உதவியுடன், பயணப்பொதியை கொண்டுச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி, டபிள்யூ.ஏ.ஜயநாத் வனசிங்க தெரிவித்துள்ளார்.