தேர்தல் முறைமை குறித்த ஆர்வலர்களின் மாநாடு ஒன்று கொழும்பில் கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், தேர்தல் சார்ந்த நிபுணர்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பிலான ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.