தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தையில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பின்னதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.