Header image alt text

உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடைந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் உத்தியோகபூர்வ நிர்வாக காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் 3 ஆயிரத்து 148 பாடசாலைகள், 10ற்கும் குறைவான ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் 2017ம் ஆண்டறிக்கையில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் போதாமையை இது எடுத்துக்காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். Read more

மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்துவரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பிரதான வீதிகளில் வெள்ளமானது இரண்டு அடி வரை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளது. இதன்படி நாவலபிட்டி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பொலிஸ் நிலையம் வரையான பகுதி இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Read more

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, பழைமை வாய்ந்த புத்தர் சிலைகளும் வேறு சில பழைமை வாய்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும், பொருட்களும் பொலன்னறுவை காலத்துக்குரியவை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி வழமைபோல் வழங்கப்பட்டுவரும் பொது விடுமுறையை அரசாங்கம் இரத்து செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர் நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், Read more

இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின்கீழ் சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

எனினும், இவர்களுள் 23 பேர் ஏனைய குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், விடுதலை செய்யப்படுகின்ற ஏனைய 405 பேரில் 4 பெண்களும் உள்ளடங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புலிகளின் ஆதரவாளர்கள் 4 பேருக்கு தமிழக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தமிழகம் இராமநாதபுரம் மாவட்ட நீதவான் ஏ.கயல்விழியால், கிருஷ்ணகுமார், சுபாஷ்கரன், ராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகிய நால்வருக்கே நேற்று இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும், ராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. Read more

திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பெரிய மிதக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், இலங்கையில் மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், 1000 படுக்கைகள், 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அதிநவீன பரிசோதனை வசதிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையின், யு.எஸ்.என்.எஸ். மெர்ஸி என்ற மிதக்கும் மருத்துவமனை கடந்த 25ஆம் நாள் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது. Read more

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி உதயன்மூலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலம் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.