இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின்கீழ் சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

எனினும், இவர்களுள் 23 பேர் ஏனைய குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர், விடுதலை செய்யப்படுகின்ற ஏனைய 405 பேரில் 4 பெண்களும் உள்ளடங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.