இரணைத்தீவு மக்களது காணி விடுவிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், தற்போது இரணைத்தீவிற்கு சென்று அங்கு இரண்டாவது வாரமாக போராட்டத்தை நடத்துகின்றனர்.

அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்தித்து ஒத்துழைப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.