Header image alt text

இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது. Read more

அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.

பிரதமருடனான இந்த சந்திப்பில் மேக் தொன்பரி, கேரோல் சீ போட்டர், விக்கி ஹட்ஸ்லர் குய்ட்டர் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் அக்குல் கேஷாப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய படைகளின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மக்கிலேனென் தொன்பெர்ரி, என்ரிக் என்றிக் குலார், விக்கி ஹாஸ்லேர், கரோல் ஷி போர்ட்டர் உள்ளிட்டோர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தனர். இலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பினை விசேடமாக நினைவுகூர்ந்தார். Read more

ஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி, டிப்பர் ரக வாகனம் மற்றும் ஜீப் வண்டி ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட ஜீப் வண்டி, டிப்பர் வாகனத்தின் பின்னால் மோதியுள்ளது. Read more

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்றது.

´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. Read more

மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மற்றும் ஆனமடு கிராமங்களுக்கு மக்கள் பயணம் செய்வதற்காக, கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய, சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளநீர் வடிந்தோடாமையின் காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். Read more

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொலையுண்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரியும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. Read more

மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேணப்படுகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டத்தன் பின்னரே ‘ஏ’ தர சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது கிடைத்துள்ளமை இலங்கை மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அதன் தலைவர் என டி.உடகம தெரிவித்துள்ளார். Read more