யுத்தக் காலத்தின் இறுதியில் புலிகள் அமைப்பினரால், புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, கிளிநொச்சிப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தோண்டும் முயற்சியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி அரியநகர் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்கத்தை தோண்டும் பணி 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காததால் நிறுத்தப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களிலும் விடுதலை புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டும் பணிகள் நடைபெற்றிருந்தபோதிலும், இதுவரையில் தங்கம் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.