விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. இறுதிப் போர் நடைபெற்று 9 வருடங்கள் கடந்தநிலையில் குறித்த அல்பத்தில் காணப்படும் புகைப்படங்களில் பிரபாகரனின் பல படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.