சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பில் இன்று நடைபெற்றது.
தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி எனும் தொனிபொருளில் நடைபெற்ற இந்த மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையின்போது, கடந்த 3 வருட காலப்பகுதிக்குள் எமது அரசாங்கம் இலங்கையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார். Read more