மின்னேரியா தேசிய பூங்காவில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக காட்டு யானைகளை பார்வையிட பூங்காவிற்கு சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்து சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதன்போது, சுமார் 100 ஜீப் ரக வாகனங்கள் கிரிஓய ஊடாக பயணிக்க முடியாத நிலையில் நேற்று பூங்காவினுள்ளேயே சிக்கிக் கொண்டன. இதன் காரணமாக, சுற்றுலாப்பயணிகள் குறித்த பகுதியில் இருந்து நடந்தே வெளியேறியுள்ளனர்.