இரட்டை பிரஜா உரிமை வழங்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் மேலும் 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்படவுள்ளது. இவை எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படவிருப்பதாக குடிவரவு குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல், இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் இதற்காக சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதாகவும் குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.