Header image alt text

மாங்குளம் கல்குவாரி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான மாற்றுத் திறனாளி நா. சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சென்று தேங்காய் வியாபாரம் செய்யும் அவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் 41 சிறுவர்களுடன் இயங்கி வருகின்ற திலகவதியார் சிறுவர் இல்லச் சிறார்களின் ஒருநாள் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் (06.05.2018) 16,000 ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

செர்பியா நாட்டின் முதலாவது பிரதி பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிக்கா டெசிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. Read more

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விசேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார். விசேட விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

இன்றுகாலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளும் தொழிற்சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர். Read more

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, நியுயோர்க் நகர சட்டமா அதிபரும், அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியுள்ளார்.

அமெரிக்க ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தங்களிடம் அவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன், உடல்ரீதியான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் தானியா செல்வரத்னம் என்ற இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். Read more

வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நீங்கலாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமையைக் கண்டித்தே குறித்த அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது அவசர சிகிச்சை அனைத்து வைத்தியசாலைகளிலும் வழங்கப்படும் என இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மிகை ஊழியர் அதிபர் சங்கம் இன்றையதினம் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கல்வியமைச்சின் வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தம்மை அதிபர் சேவையில் நிரந்தர நியமனத்தின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் அமைச்சரையோ அல்லது அமைச்சின் அதிகாரிகளையோ தம்மால் சந்திக்க முடியாவிட்டால் நாளை வரை தொடர்ந்து கல்வியமைச்சின் வளாகத்தில் தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்துவரும் மக்களை மீள்குடியேற்றும் வகையில்

கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். Read more

அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், Read more