மாங்குளம் கல்குவாரி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான மாற்றுத் திறனாளி நா. சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று தேங்காய் வியாபாரம் செய்யும் அவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more