தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள் ளைச் சம்பவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை 14.05.18 இடம்பெற் றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளை யர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி யுள்ளனர்.

தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாக வும் தெரிவிக்கப்படுகிறது.