ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோகணேஷன் குறிப்பிட்டுள்ளார்.

அங்கஜன் எம்.பியை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை குறித்த தகவலை, இன்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.