முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடும் நடவடிக்கைக்கான அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.