கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, குறித்த வீட்டிலிருந்து சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. இவை பாவிக்கக்கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முன்னாள் போராளி புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.