நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பிற்போடப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.