காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காண்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.இதேவேளை “ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அநேகமானோர் இந்த நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றால் குற்றவாளியாக இணங்காணப்பட்டார். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.