லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பில் மணிமாறன் செல்லையா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதாகியுள்ளார். குறித்த சந்தேகநபர் ஏற்கனவே வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று விம்பிள்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.