நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல நாதன் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம் அதிகளவான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் 9831 குடும்பங்களைச் சேர்ந்த 42,053 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.