புதையல் தோன்றுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்மடுவில் உள்ள காணி ஒன்றில் பூஜை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நால்வரும் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ இல்லை என தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணைகள் தொடர்கின்றன.