Header image alt text

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தைக் கூறியுள்ளது. மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, Read more

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

இரண்டு பேர் காணமற்போயுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. 1,53,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் குறிப்பிட்டுள்ளார். Read more

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: Read more

இலங்கையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சுமார் 6,000 சீனர்கள் பணியாற்றுகின்றனர் என, கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர், இலங்கையர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென, அவர் தெரிவித்துள்ளார். Read more

இலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக இலங்கை பங்குப்பற்ற உள்ளது. Read more

இந்தியாவின் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் இன்று ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் இன்றுகாலை நடைபெற்றது. இதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. Read more

மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்களுடன் சம்பவதினம் இரவு 10 மணியளவில் சந்திவெளி ஆற்றைக் கடக்க தோணியில் ஏறி சென்றுள்ளார்.  Read more

யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இங்கு மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்தார். Read more

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட சாரதிகள், அனைத்து வேலையாட்கள், இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடத்தினர்.

இந்த எதிர்ப்புப் போராட்டம், ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையைக் கண்டித்து, நகர சபை முன்றலில் நடத்தப்பட்டது. இதனால் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகள் நடைபெறவில்லை. Read more

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள எல்லையோரக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அமைதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேற சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். Read more