இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தைக் கூறியுள்ளது. மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, 01- Mr. Ermindo Augusto Ferreira – மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகர்
02- Mr. Klas Molin – சுவீடன் தூதுவர்
03- Mr. Harri Kamarainen – பின்லாந்து தூதுவர்
04- Mr. Abdulnaser H.Al Harthi – சவூதி அரேபிய தூதுவர்
05- Mr. Augusto Montiel – வெனிசுலா தூதுவர்

நிகழ்வின்போது புதிய இராஜதந்திரிகளிடையே உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையுடன் நாட்டின் அபிவிருத்திக்காக உலகின் சகல நட்பு நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் தமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.