Header image alt text

இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது. Read more

அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரம் தற்போது இணைக்கப்பட்டுள்ளதனால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாது மொரகஹாகந்த நீர்பாசன திட்டமும் இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.

பிரதமருடனான இந்த சந்திப்பில் மேக் தொன்பரி, கேரோல் சீ போட்டர், விக்கி ஹட்ஸ்லர் குய்ட்டர் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் அக்குல் கேஷாப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய படைகளின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மக்கிலேனென் தொன்பெர்ரி, என்ரிக் என்றிக் குலார், விக்கி ஹாஸ்லேர், கரோல் ஷி போர்ட்டர் உள்ளிட்டோர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தனர். இலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பினை விசேடமாக நினைவுகூர்ந்தார். Read more