முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள அமைதிபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் உள்ள எல்லையோரக் கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற அமைதிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேற சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். Read more
பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பஸ் நிலையத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலாவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத் தலைவர் நா.நகுலராஜா நேற்று தெரிவித்துள்ளார்.
யாழ். தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கோகிலாக்கண்டிக் கிராமத்தில் அமைந்துள்ள காந்தி முன்பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, அப் பள்ளிச் சிறுவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான மண்ணில் வடிவமைக்கப்பட்ட நீர்க் குடுவை, அடுப்பு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை புளொட் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.
இலங்கையில் சீனா தமது இராணுவமயமாக்களை மேற்கொள்வதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டவை அன்றி வேறில்லை என்று சீனாவின் தூதுவர் செங் க்சியுவான் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று கையளித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நிவாரணப் பணிகளுக்காக தற்போதைய நிலையில் 49 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.