Header image alt text

யாழில் இருக்கும் காணிப்பிரச்சனைக்கு சிறந்த வளி அலுவலகங்கள் எல்லாம் மாங்குளத்திற்கு வருவது என்று வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்பாசன திணைக்களம் மாங்குளத்தில் 18.06.18 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதன்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் அவர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தியுள்ளார்

அவர் தனது உரையில்.
வடக்கில் மத்திய நிலையத்தினை நோக்கி சகலவிடயங்களும் நகர்த்தப்படவேண்டும் என்பது எங்களின் அவாவாக இருக்கின்றது. Read more

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்து காணாமல் போனோர் சங்கத்தின் தலைவிகள் சென்றுள்ளார்கள்.
இவர்கள் 20.06.18 அன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பிலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு அமைந்துள்ள காணாமல் போனோர் அலுவலத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் இவர்கள் எடுத்துரைக்கவுள்ளார்கள்.
ஜ.நா மனித உரிமை ஆணைக்கழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் யூன் 18 ஆம் திகதி தொடக்கி யூலை 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது