Header image alt text

அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள்.

இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more

முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர். Read more

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள்மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் புளொட் அமைப்பினால் அனுட்டிக்கப்பட்டு வரும்வீர மக்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் தாயகத்திலும் சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்களது நினைவுநாளான 13.07.2018 தொடக்கம் கழகத்தின் செயலதிபர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளான 16.07.2018 வரையிலான நாட்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நாளன்றுஅனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்…
அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (08.07.2018 அன்று காலை 08.00 மணிக்கு) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல், அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 29வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

Read more

கடும் விசனம் – உறுப்பினர் காண்டீபன்
நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியதிற்கு பதிலளிக்கும் போது புளொட் அமைப்பின் நகர சபை உறுப்பினர் காண்டீபன், இவ்வாறு தெரிவித்தார்
கடந்த ஆண்டு மார்கழி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் அத்துமீறி இரண்டு மாடி வியாபார கட்டிடம் ஒன்றினை கட்டியது மட்டும் அல்லாமல் நகர சபையின் செயலாளரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் Read more