தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள்மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் புளொட் அமைப்பினால் அனுட்டிக்கப்பட்டு வரும்வீர மக்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் தாயகத்திலும் சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்களது நினைவுநாளான 13.07.2018 தொடக்கம் கழகத்தின் செயலதிபர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளான 16.07.2018 வரையிலான நாட்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நாளன்றுஅனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.