சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார் என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பரிசோதனைகளைத் தொடர்ந்து பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.அவரது வீட்டில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகளைத் தொடர்ந்து சுழிபுரம் – திருவடிநிலை மயானத்தில் புதைக்கப்பட்டது.
இறுதிக் கிரியைகளில் பிரதேச மக்கள், காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வெண்கரம் ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், காட்டுப்புலம் – பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேலும் சந்தேகத்தின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அவர்களிடம் விசாரணை செய்ததில் ஒழித்து வைத்த மாணவியின் உடைகள் புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுளளதுடன் 21 வயது இளைஞர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தைக்கும் சிலருக்கும் ஏற்பட்டு முரண்பாடு காரணமாக இச்செயல் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.