Header image alt text

விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் வைபவம் 29.06.2018 அன்று காலை 9:30 மணியளவில் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ .சகிலாபானு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட 50% ஆன அறவீட்டுத் தொகை மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை திட்டம் (2018) ஆகியவற்றின் கீழ் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது . Read more

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டது குண்டுவீசும் ரஷ்ய முசய்ஃபிரா விமானம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் தொடங்கிய 11 நாட்களில் 90க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.