Header image alt text

புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,

இராஜாங்க அமைச்சர்கள்

ரஞ்சித் அலுவிஹார – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர்
லக்கி ஜயவர்தன – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர். Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

கையெழுத்திட்ட ஆவணங்களில் இருப்பது என்னவென்று இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை என்று சர்வதேச செய்திகள் கூறுகின்றன. Read more

ஆனி 06/2018 அன்று, வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அவர்களுக்கான புதிய அலுவலக கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில்……இன் நிகழ்வில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் G.T.லிங்கநாதன் மற்றும் தியாகராசா, வவுனியா நகரசபை தவிசாளர், அவர்களுடன் கூட்டுறவு, கால்நடை, நீர்பாசன மற்றும் விவசாய திணைக்கள மாவட்ட உயர் அதிகாரிகளுடன் கௌரவ அமைச்சர் கலந்துகொண்டிருந்தார்.
Read more

விழிநீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 9 June 2018
Posted in செய்திகள் 

மிகத் தீவிர தமிழ் தேசியவாதியும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவருமான திரு.இ.குமாரசாமி அவர்கள் இன்று (09.06.2018) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் இப் பெருந் துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – DPLF
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE

மது இன விடுதலைப் போராட்டத்தில் மரணித்த கழகக் கண்மணிகள் மற்றும் அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருமுகமாக யூலை (ஆடி)மாதம் 13 தொடக்கம் 16 வரை நினைவு கூரப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வின் 2018ம் ஆண்டு நிகழ்வுக்காக இன்று (03.06) மாலை 04.00 மணிக்கு கோவில் குளம் உமாமகேசுவரன் இல்லம் வவுனியா தலைமை காரியாலத்தில் 29வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கழகத்தின் வவுனியா மாவட்டபொறுப்பாளரும் நகரசபையின் உறுப்பினருமான கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more

மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன.

அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

உதவச் சென்ற பாலத்தீன பெண் தன்னார்வலர் இஸ்ரேல் சுட்டதில் பலி இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் நடந்துவரும் சண்டையில் இஸ்ரேல் படைகள் சுட்டதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கச் சென்றபோது, கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதாகும் பெண் தன்னார்வலர் ரஸன் அல்-நஜாரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்துகொண்டனர்.
சண்டை நடக்கும் பகுதியில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா கவலை தெரிவித்துள்ளது

வ / ஓமந்தை மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு விழாவும் கண்காட்சி நிகழ்வும் 02.06.2018 இன்று காலை 10 மணியளவில் திருமதி .வி .சர்மிளா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ A .அடைக்கலநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் திரு .ச .இராஜேஸ்வரன், மருதோடை குருக்கள் வே .யோகராசா அவர்களும் Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டத்தை பார்வையிட்டவாறு மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர். Read more

தருமபுரம், உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று  காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தாகவும் பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகிறது. Read more