ஜேர்மன் நாட்டில் இலங்கையர் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் உணவு சாலை அமைத்து தாயகத்தில் அல்லல்படும் தமிழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆண்டு தோறும் இடம் பெற்று வரும் கொ ண்டாட்டங்களில் உணவு சாலை அமைத்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை கொண்டு தாயகத்தில் வாடும் தமது உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி மேற்கொண்டு வருகின்றது.தமது உளைப்பில் சிறு பகுதியை தமது உறவுகட்கு உதவி வரும் புலம்பெயர் வாழ் நல் உள்ளங்கள், ஒரு நாள் உழைப்பினை முழுவதுமாக உறவுகளுக்கு வழங்கும் முகமாக தமது நேரத்தை முழுமையாக மக்கள் பணிக்காக செலவு செய்து உழைத்து வரும் இவ் தொண்டர்கள் பணி பாராட்டுதலுக்குரியது.