தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ்கிளையால் நினைவு கூரப்படும் 29வது வீரமக்கள் தினம் எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 க்கு சுவிஸ் சூரிச் மாநகரில் உள்ள Unter Affoltern  மண்டபத்தில் (GZ Affoltern, Bodenacker -25, 8046 Affoltern Zürich)   நடைபெறவுள்ள வீரமக்கள் தின நிகழ்வில் சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.கழகக் கண்மணிகள்; அனைத்து இயக்கப்போராளிகள்; பொதுமக்கள் அனைவரையும்  நினைவு கூரும் இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.

ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் இன்னுயிரை ஈர்ந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி, மௌனஞ்சலி ஆகியவற்றினைத் தொடர்ந்து..,

மாணவர்களின் விநோத உடைப் போட்டி, நடன நாட்டியங்கள், நாடகம், பட்டிமன்றம்      (‘முகநூல் பதிவுகள் மற்றும் பகிர்வுகள் மக்களுக்கு பயனுள்ளதா? பாதிப்பானதா??’) விருந்தினர்கள் உரை, பிரதம விருந்தினர் உரை , மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

(இதேவேளை அன்றையதினம் காலை 08.00 மணிக்கு, இதே மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘அறிவுத்திறன் போட்டியில்’ இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் நேரில் வந்து தம்மை பதிவு செய்து விட்டு மேற்படிப்பு பரீடசையில் கலந்து கொள்ள முடியும் என்பதையும் அறியத் தருகிறோம்.)

சுவிஸ் வாழ் அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்) சுவிஸ்கிளை.

தொடர்புகளுக்கு.. ; 077.9485214, 078.9167111, 078.6461681,079.7333539, 079.9401982, 079.9297719, 079.2104566, 076.4454112,