பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சிங்கப்பூர் நோக்கி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 06 ஆவது ´சர்வதேச நகரம்´ மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர் மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.