Header image alt text

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம், கொழும்பு-13, செட்டியார்த் தெருவில், இன்றுகாலை 7:45 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இவர், மாநகர சபைக்கான தேர்தலில், சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டியவராவார். Read more

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், பொலிஸ் விசேட அதிரடிப்படை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே, இந்த வெடிபொருட்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில், மீட்கப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் 744 கிராம் நிறைகொண்டவை என்றும் விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர். Read more

இலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் இராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் யாழில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ்ப்பாண கோட்டையின் தெற்கு வாசல் பக்கமாக நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. Read more