Header image alt text

எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம்உயிரை அர்ப்பணித்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்!

எதிர்வரும் 15.07.2018 (ஞாயிறு) மாலை 15.00க்கு நடைபெறவுள்ள வீரமக்கள் தின நினைவஞ்சலியில் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

இடம்: Salle Maxime Jobert ,

21 Bis rue villot 93120 la Courneuve ,

Tram 1 : arrêt – Hôtel de Ville de La  Courneuve

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
– பிரான்ஸ் கிளை-

மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6,500 ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தளவாயில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளும் பல்வேறு தேவைகளும் இருக்கின்றன. Read more

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 14ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் 10.30வரை நெடுந்தீவு ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை முதலான பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணாமல்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

முற்பகல் 10.45 முதல் 12.15 வரை கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி முதலான பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணாமல்போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. Read more