புளொட் அமைப்பின் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு மட்டக்களப்பு புகையிரத வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் 15.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்(பவன்), வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more