Header image alt text

பிரித்தானியாவின் வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் அவர், 7 கிழமைகள் பாராளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்துக்கான முழுச் செலவான £ 100,000களை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது. இதன்மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவுடன் இலங்கை கடற்படையினர் இணைந்து திருகோணமலையில் கூட்டு இராணுவப் போர் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். ‘கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை’ என்ற பெயரில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படையின் 4ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும் சிறப்பு படகு படையணி ஆகியவற்றை சேர்ந்த படையினர் இந்த இராணுவ கூட்டுப்போர் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். Read more

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க( தலைமையில் நேற்று அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். Read more

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

22 வருடங்களாக அன்னதான மடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடற்படையினர், அன்னதான மடத்திற்கு சொந்தமானவர்கள் தொடர்ந்து விடுத்து வந்த வேண்டுகோளினைத் தொடர்ந்தே இன்று வெளியேறியுள்ளனர். புலிகளிடம் இருந்து கடந்த 1996ம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. Read more

யால தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, மத்தள தேசிய விமான நிலையத்துக்கு, உள்நாட்டு சேவைகளை பயன்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த குறித்த குழுவினர், இன்று பிற்பகல் 2 மணிக்கு, மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, இவர்கள் அதற்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. Read more