Posted by plotenewseditor on 20 July 2018
Posted in செய்திகள்
குற்றவாளிகளை தடுப்பதன் உயரிய தீர்வு மரண தண்டனை அல்ல. குற்றவாளிகளை கட்டுப்படுத்த முதலில் சட்ட நகர்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இலஞ்சம் (திருத்த) சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முன்னெடுக்கப்பட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலஞ்சம் (திருத்த) சட்டமூலத்தில் ஒரு சிறிய திருத்தும் மட்டுமே புதிதாக இடம்பெற்றுள்ளது, எனினும் இது மிகவும் முக்கியமான திருத்தமாகும். இப்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் இந்த ஊழல் குற்றங்கள் அனைத்துமே நீதவான் நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணைக்கு எடுக்கப்படும். Read more