யாழ்ப்பாணத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவம் வீடமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீடும் சுமார் 5 இலட்சம் ரூபா மதிப்பில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 1000 வீடுகள், யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இராணுவத்தினரால் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி வழிகாட்டலின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.