நாளைய தினம் ஆசிரிய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பகல் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களென தெரிவித்து அரசியல் சார்பான நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆசிரிய தொழிற்சங்கங்கள் நாளைய தினம் முன்னெடுக்கவிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.