கொழும்பு மாநகர சபையின் பொது நூலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி புத்தகக் கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் குறித்த கண்காட்சி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பொது நூலக நலன்புரி சங்கம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறது. நேற்று ஆரம்பமாகிய இக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.