சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த குழு கொழும்புக்கு வரவுள்ளது.

இலங்கை வரவுள்ள இந்த குழுவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக திணைக்களத்தின் உதவி அமைச்சர் கோ யேசோ தலைமைத்தாங்க உள்ளார். மேலும் இந்த குழுவினர் இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.