Header image alt text

(ஆர்.ராம்)
தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எத்தனிப்பதாக புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து சொற்ப காலங்களிலேயே புளொட் அமைப்பிடம் இருக்கும் ஆயுதங்களை கையளிக்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. Read more

சுங்க திணைக்கள அதிகாரிகள் 5 பேரை கட்டுநாயக விமானநிலையத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குவைட் நாட்டில் இருந்து வருகைதந்த வெளிநாட்டவர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையே அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு புலனாய்வு பிரிவொன்றை நடத்திச் செல்வதில் அவசியம் இல்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை உடனடியாக கலைக்குமாறு அண்மையில் வெளியிட்ட உத்தரவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்பகல் தர்மபுரம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். Read more

இந்தியாவின் அந்தமான் தீவில் வசிக்கும் 48 இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் ஏதிலிகளாக அந்தமான் – நிக்கோபர் தீவில் குடியேறினர். Read more

நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் மீது மன்னார் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராமாரியாகக் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதடைந்ததுடன், சாரதிக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை பயணித்த புகையிரதம் மீது, Read more

கெரவலப்பிட்டிய, அவரகொட்டுவ பிரதேசத்தில் உள்ள இரசாயண தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணி நேரமாக இந்த தீ இருந்துள்ளதுடன், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரத கடவையில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், கந்தசாமி சந்திரகுமார் (வயது 29) மற்றும் இராஜகோபால் கிரிசாந் (வயது 27) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். Read more

சட்டவிரோதமாகக் குடியேறிய 6 இலட்சம் பேரை உடனடியாக சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் மலேசிய குடியேற்றத்துறை ஆரம்பித்தது.

அதன்படி, இதுவரை 3,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆகஸ்ட் 30-க்குள் சரணடைய வேண்டும் என்றும் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மலேசிய அரசு எச்சரித்துள்ளது. Read more

அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார். வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் எழுதிய ‘யார் இந்த இராவணன்’ நூல் வெளியீட்டு விழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more