மஹர சிறைச்சாலைக்கு முன்னால் பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் சிறைச்சாலையில் அனைத்து வாசல்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட பேருந்து மீண்டும் சிறைச்சாலைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 100 வருடங்கள் பழமையான வீதியை மூடிவிட்டு அதற்கு மாற்று வழி ஒன்றை ஏற்படுத்தி தராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வு ஒன்றை வழங்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.