நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் உரிய உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. Read more
நாட்டில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுதல் தொடர்பிலான கருத்தாடல் குறித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை நிராகரித்த, அரசாங்கம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதற்கான வாய்ப்பு குறித்து கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளியான கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மத்தல விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலெனக் குறிப்பிட்டுள்ள, ஜே.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் எம்.பியுமான, விஜித ஹேரத், ‘அந்த விமான நிலையம், இந்தியா வசமாவதை கடுமையாக எதிர்ப்போம்’ என்றார்.
புலிகள் அமைப்பு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
புளொட் அமைப்பின் 29வது வீரமக்கள் தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் ஏற்பாட்டில் கடந்த 21.07.2018 சனிக்கிழமை அன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, ஐக்கிய நாடுகளின் விசேட தூதுக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் ஆசிரிய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பகல் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்தே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி நிர்வாக சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மாணவர்கள் கொழும்பில் இன்று முன்னெடுத்த பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மகாபொல புலமைப்பரிசிலை 1,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும் விரிவுரையாளர்களின் வெற்றிடத்தை நிரப்புமாறு கோரியும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.